முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி: ஐகோர்ட் கிளை

புதன்கிழமை, 3 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : 10-ம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுவை ஐகோர்ட் மதுரைகிளை தள்ளுபடி செய்துள்ளது. 

10-ம் பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் குறைவாக மாவட்டஙகளில்தான் அதிக பாதிப்பு உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது. 

தேர்வை தள்ளிப்போடுவது மாணவர்களின் மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா அதிகமாக இருப்பதை அறிந்தே அரசு முடிவு எடுத்திருக்கும். அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்வதை தமிழகத்துடன் ஒப்பிட கூடாது. 10-ம் வகுப்பு தேர்வு எழுத மாணவ-மாணவிகள் தயார் நிலையில் இருக்கிறார்களா? மனநல சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட் கிளை வேண்டுகோள் விடுத்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து