முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான இந்திய நிறுவனத்தின் முதல் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை விழிபிதுங்க வைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் ஆரம்பக் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. 

ஐதாராபத்தைச் சேர்ந்த  பயோடெக் நிறுவனம்   கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  கொரோனாவுக்கு எதிராக இந்தியா கண்டுபிடித்துள்ள முதல் தடுப்பு மருந்தான COVAXINE  விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெற்றதால் மனிதர்களிடம் பரிசோதிக்க  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. 

ஜூலை  மாதத்தில் இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும் எனத் தெரிகிறது. ஐ.சி.எம்.ஆர் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் கோவக்சைன் மருந்தை கண்டறிந்துள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்திற்கு உலகம் நகரும் என எதிர்பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து