எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று காலை வர்த்தக நிலவரப்படி 28 பைசாக்கள் சரிந்து 90.43 ஆக இருந்தது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்திய ரூபாய் மதிப்பு ஏற்கனவே 90-ஐ தாண்டிவிட்டது. அரசாங்கம் எவ்வளவுதான் முரசு கொட்டினாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பதை காட்டுகிறது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் சரியாக இருந்திருந்தால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையாது.
2014-க்கு முன்பு ‘இந்தியாவின் ரூபாய் அதன் மதிப்பை இழக்க காரணம் என்ன? இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். நாடு உங்களிடம் இருந்து பதிலைக் கோருகிறது' என்று மோடி கேட்டார். நேற்று நாங்கள் மோடியிடம் அதே கேள்வியை கேட்கிறோம். அவர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


