முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும் நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தகவல் தொழில்நுட்பம்  என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள் மற்றும் ஊராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும் நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெறவுள்ளன.

ஆகவே மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் பணியாற்றி வரும் நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து மாவட்ட செயலாளர்கள் தலைமை கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து