முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் மறைவு : முதல்வர் எடப்பாடி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி  நேற்று  (28.7.2020) அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

பாலன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும், பாப்ஸ்க்கோ மற்றும் AFT பஞ்சாலை தலைவராகவும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, புதுச்சேரி  மக்களின் நலன்களுக்காக உழைத்தவர்.

புதுவை மக்களின் நன்மதிப்பை பெற்றவர். பாலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை  வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து