எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 21 திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு தமிழக முதல்வர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
புதிதாக கட்டப்படவுள்ள இத்தடுப்பணையின் நீளம் 575 மீட்டர், உயரம் 1.50 மீட்டர் மற்றும் கொள்ளளவு 28.58 மில்லியன் கன அடி ஆகும். மேலும், தடுப்பணையின் மேற்புறம் 1500 மீட்டர் மற்றும் கீழ்புறம் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வெள்ளத்தடுப்பு கரைகள் அமைக்கப்படவிருக்கின்றன.
இந்த தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயரும். இதனால் விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் உயரும். இதனால் இப்பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2912 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1,602 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், காட்டூர் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து, கொள்ளளவினை மேம்படுத்தி, நீர்தேக்கத்தை உருவாக்கிட 62 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூர் அருகில், பாலாற்றின் குறுக்கே 42 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், எலந்தம்பட்டு கிராமத்தில், கெடிலம் ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி,
கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில், உளுந்தூர்பேட்டை மற்றும் பண்ருட்டி வட்டங்களில், மலட்டாற்றினை தொலைகல் 24,000 மீட்டர் முதல் 40,000 மீட்டர் வரை 15 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி,
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருநகரி கிராமத்தில், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே தொலைகல் 21.200 கிலோ மீட்டரில், 30 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உப்பாற்றை சீரமைத்து, உப்பாற்றின் குறுக்கே, குறுக்கு கட்டுமான கட்டமைப்புகளை 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், சாத்தக்கோன் வலசை கிராமம், சீனியப்பா தர்கா அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் திருவாடனை வட்டம், முள்ளிமுனை கிராமம் அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி,
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமம், புது அணைக்கட்டு வாய்க்காலினை 10 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி மற்றும் போடிநாயக்கனூர் வட்டம், போடிநாயக்கனூர் கிராமம், அணைப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ராஜவாய்க்கால் அணைக்கட்டை புனரமைத்தல் மற்றும் ராஜவாய்க்கால் அணைக்கட்டின் மேல்புறம் மற்றும் கீழ்புறத்தில் 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டும் பணி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டங்களில் மலட்டாறு வாய்க்காலினை 0 மீட்டர் முதல் 24000 மீட்டர் வரை 7 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி, திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் கிராமத்தில் 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், அரக்கன்கோட்டை கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களில் மைல் 1/2 முதல் 20/1 வரையிலான பாசன மதகுகள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், நத்தம் கிராமம், திருமணிமுத்தாற்றின் குறுக்கே, காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டினை 3 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யும் பணி, குஜிலியம்பாறை வட்டம், பாளையம் கிராமம், விராலிப்பட்டி கிராமத்திலுள்ள கசிவு நீர் குட்டையினை 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி கிராமம் புல எண். 487-ல் நங்காஞ்சியாற்றின் குறுக்கே ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மதயானைப்பட்டி கிராமம் அருகில் பேராம்பூர் வாரியின் குறுக்கே 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி,
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள உடுமலைக் கால்வாய் தொலைகல் 16.600 கி.மீ முதல் 23.170 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மானக் கால்வாய்களில் விடுபட்டுள்ள கால்வாயினை 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், திருக்கண்ணமங்கை வாய்க்காலில் உள்ள கட்டுமானங்களை 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் கரைகளை பலப்படுத்தி புனரமைக்கும் பணி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், எஸ்.அம்மாபட்டி மற்றும் வடுகபட்டி கிராமங்களில் (ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில்) அர்ஜுனா நதியின் குறுக்கே 2 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் அமைத்துள்ள பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயினை தொலைகல் 36.00 கி.மீ முதல் 39.50 கி.மீ வரை 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி என மொத்தம் 280 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து
25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.


