முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதயக்கனி கலைக்குழு நடத்தி வரும் சாரங்கபாணி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இதயக்கனி கலைக்குழுவை நடத்தி வரும் சாரங்கபாணி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இதயக்கனி என்ற கலைக்குழுவை நடத்தி வரும் சாரங்கபாணி, உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால உடன்பிறப்பு சாரங்கபாணி, தனது கலைக்குழுவின் மூலம் கட்சியின் கொள்கைகளையும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும் எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார்.

அன்பு சகோதரர் சாரங்கபாணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து