Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று மாநில முதல்வர்கள்  கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன் நேற்று காலை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டெல்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்த 10 மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உத்தரபிரதேச முதல்வர் யோகி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்திய பிரதேச முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.  கொரோனா தடுப்பு விஷயத்தில் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். 

கோவிட் -19 பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது - புதிய சூழலும் உருவாகிறது. கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து