முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 15-ம் தேதிக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் 4ஜி சேவை

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜம்மு - காஷ்மீரில் சோதனை அடிப்படையில் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்கப்படும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கடந்த ஆண்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது, மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது அதிவேக இன்டர்நெட் சேவையான 4ஜி நிறுத்தி வைக்கப்பட்டது. 

கடந்த 7-ம் தேதி இதுதொடர்பான விசாரணையில் மீண்டும் 4ஜி சேவை வழங்குவதற்கான இடங்களை ஆய்வு செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஒரு குழு அமைத்து எங்கெல்லாம் 4ஜி சேவை வழங்கலாம் என்பதை மத்திய அரசு ஆராய்ந்தது. 

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறுகையில், 

மத்திய அரசு அமைத்துள்ள குழு பரிசோதனை அடிப்படையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் டிவிசனில் தலா ஒரு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் 4ஜி இன்டர்நெட் சேவை வழங்க முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பின் இந்த சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் இந்த முடிவு ஒரு நல்ல நிலைப்பாடு என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து