முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற ஆர்வம் - ஸ்ரேயாஸ் அய்யர்

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் ; ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று  ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் போட்டியிலும் எந்த ஒரு அணியும் தோல்வியை சந்திக்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது இல்லை.

இந்தநிலையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன். இதற்காக எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த சீசனில் கடுமையாக போராடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து