முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. 

இதில், முக்கிய மசோதாக்களின் வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலம் நீடிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மூலமாக, தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து