எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருமங்கலம் : ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இணைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள உறுப்பினர் அடையாள அட்டை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் முன்னணியில் உள்ள அ.தி.மு.க ஒவ்வொரு கிராமங்களிலும் நகரங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி சார்பு அணிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் தங்களது பங்கிற்கும் பல்வேறு யுக்திகள் மூலம் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றன.
இந்நிலையில் தனியார் வியூக நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தி.மு.க ஆன்-லைன் முறையில் உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளை துவங்கியுள்ளது.
அதற்காக இணைதள முகவரியை வெளியிட்டுள்ள தி.மு.க மேலிடம் அதில் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு ஓ.டி.பி. எனும் குறியீட்டினை அனுப்பி அதில் ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு இணையம் வழியாக உறுப்பினர் அடையாள அட்டையினை வழங்கி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் பலர் தி.மு.க.வில் உறுப்பினராகி வருகின்றனர் என அக்கட்சியின் மேலிடம் கூறி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக இணைந்திருப்பதாகவும், அதற்கு சான்றாக அமெரிக்க அதிபரின் படம் கொண்ட இணையவழி தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அடையாள அட்டையில் டொனால்டு டிரம்ப், தகப்பனார் பெயர் ப்ரெட்டிரம்ப், வயது74, உறுப்பினராக சேர்ந்த நாள்; 19.09.2020 என்றும் அவர் சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் இருப்பதாகவும், அவரது உறுப்பினர் அட்டைஎண். DMKOMCH 0161464069 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் முறையில் தி.மு.க.வில் இணைந்திருப்பதாக வெளியான இணையவழி அடையாள அட்டை பெரும் வைரலாகி தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு இணையவழி உறுப்பினர் சேர்க்கை பலனளிக்காமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் தி.மு.க மேலிடம் அப்செட் ஆகியுள்ளது.
சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அடையாள அட்டை பதிவுகள் மூலமாக ஆன்-லைன் முறையில் ஏராளமானேர் போலியாக தி.மு.க உறுப்பினராக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த பதிவிற்கு பதிலளித்து வரும் வலைத்தள பயனாளர்கள் என்னதான் அமெரிக்க அதிபராக இருந்தாலும் உதயநிதி ஒப்புதல் இல்லாமல் பதவி கிடைக்காது.
அடுத்த தி.மு.க செயற்குழு கூட்டத்திற்கு அமெரிக்க அதிபரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், போலி உறுப்பினர் அடையாள அட்டை வெளியான நிகழ்வு குறித்து சி.ஐ.ஏ விசாரணை நடத்திட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர். இது போன்ற காமெடி கலாட்டா நிகழ்வுகளால் தி.மு.க ஐ.டி.விங் நிர்வாகிகளும்,கட்சித் தொண்டர்களும் கலங்கி நிற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
மெஸ்ஸியின் இந்திய பயணம் ரத்து?
16 Oct 2025திருவனந்தபுரம்: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
ஆஸ்திரேலிய தொடர்: பயிற்சியை தொடங்கிய ரோகித், கோலி
16 Oct 2025மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய முன்னணி வீரர்கள் ரோகித் - விராட் கோலி அங்கு
-
செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருது அபிஷேக், மந்தனாவுக்கு அறிவிப்பு
16 Oct 2025துபாய்: செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருதை இந்தியாவின் அபிஷேக், மந்தனா வென்றுள்ளனர்.
அதிரடி ஆட்டக்காரர்...
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நவீன தமிழகத்தை கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க.: இ.பி.எஸ்.
17 Oct 2025சென்னை : திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க. என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வி.ஐ.டி. போபால் பல்கலையில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
17 Oct 2025சென்னை, வி.ஐ.டி. போபால் பல்கலைகழகத்தில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
-
மதுரை மேயர் ராஜினாமா: தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்
17 Oct 2025மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதம்
17 Oct 2025சென்னை, சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
17 Oct 2025சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
இருமல் மருந்து விவகாரம்: இ.பி.எஸ். கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
17 Oct 2025சென்னை : கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை” என அமைச்சர்