எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இணைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள உறுப்பினர் அடையாள அட்டை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் முன்னணியில் உள்ள அ.தி.மு.க ஒவ்வொரு கிராமங்களிலும் நகரங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி சார்பு அணிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் தங்களது பங்கிற்கும் பல்வேறு யுக்திகள் மூலம் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றன.
இந்நிலையில் தனியார் வியூக நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தி.மு.க ஆன்-லைன் முறையில் உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளை துவங்கியுள்ளது.
அதற்காக இணைதள முகவரியை வெளியிட்டுள்ள தி.மு.க மேலிடம் அதில் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு ஓ.டி.பி. எனும் குறியீட்டினை அனுப்பி அதில் ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு இணையம் வழியாக உறுப்பினர் அடையாள அட்டையினை வழங்கி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் பலர் தி.மு.க.வில் உறுப்பினராகி வருகின்றனர் என அக்கட்சியின் மேலிடம் கூறி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக இணைந்திருப்பதாகவும், அதற்கு சான்றாக அமெரிக்க அதிபரின் படம் கொண்ட இணையவழி தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அடையாள அட்டையில் டொனால்டு டிரம்ப், தகப்பனார் பெயர் ப்ரெட்டிரம்ப், வயது74, உறுப்பினராக சேர்ந்த நாள்; 19.09.2020 என்றும் அவர் சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் இருப்பதாகவும், அவரது உறுப்பினர் அட்டைஎண். DMKOMCH 0161464069 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் முறையில் தி.மு.க.வில் இணைந்திருப்பதாக வெளியான இணையவழி அடையாள அட்டை பெரும் வைரலாகி தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு இணையவழி உறுப்பினர் சேர்க்கை பலனளிக்காமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் தி.மு.க மேலிடம் அப்செட் ஆகியுள்ளது.
சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அடையாள அட்டை பதிவுகள் மூலமாக ஆன்-லைன் முறையில் ஏராளமானேர் போலியாக தி.மு.க உறுப்பினராக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த பதிவிற்கு பதிலளித்து வரும் வலைத்தள பயனாளர்கள் என்னதான் அமெரிக்க அதிபராக இருந்தாலும் உதயநிதி ஒப்புதல் இல்லாமல் பதவி கிடைக்காது.
அடுத்த தி.மு.க செயற்குழு கூட்டத்திற்கு அமெரிக்க அதிபரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், போலி உறுப்பினர் அடையாள அட்டை வெளியான நிகழ்வு குறித்து சி.ஐ.ஏ விசாரணை நடத்திட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர். இது போன்ற காமெடி கலாட்டா நிகழ்வுகளால் தி.மு.க ஐ.டி.விங் நிர்வாகிகளும்,கட்சித் தொண்டர்களும் கலங்கி நிற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.