எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருமங்கலம் : ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இணைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள உறுப்பினர் அடையாள அட்டை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் முன்னணியில் உள்ள அ.தி.மு.க ஒவ்வொரு கிராமங்களிலும் நகரங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி சார்பு அணிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் தங்களது பங்கிற்கும் பல்வேறு யுக்திகள் மூலம் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றன.
இந்நிலையில் தனியார் வியூக நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தி.மு.க ஆன்-லைன் முறையில் உறுப்பினர்களை சேர்த்திடும் பணிகளை துவங்கியுள்ளது.
அதற்காக இணைதள முகவரியை வெளியிட்டுள்ள தி.மு.க மேலிடம் அதில் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு ஓ.டி.பி. எனும் குறியீட்டினை அனுப்பி அதில் ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு இணையம் வழியாக உறுப்பினர் அடையாள அட்டையினை வழங்கி வருகிறது. இதன் மூலம் தினந்தோறும் பலர் தி.மு.க.வில் உறுப்பினராகி வருகின்றனர் என அக்கட்சியின் மேலிடம் கூறி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் மூலம் தி.மு.க உறுப்பினராக இணைந்திருப்பதாகவும், அதற்கு சான்றாக அமெரிக்க அதிபரின் படம் கொண்ட இணையவழி தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அடையாள அட்டையில் டொனால்டு டிரம்ப், தகப்பனார் பெயர் ப்ரெட்டிரம்ப், வயது74, உறுப்பினராக சேர்ந்த நாள்; 19.09.2020 என்றும் அவர் சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் இருப்பதாகவும், அவரது உறுப்பினர் அட்டைஎண். DMKOMCH 0161464069 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆன்-லைன் முறையில் தி.மு.க.வில் இணைந்திருப்பதாக வெளியான இணையவழி அடையாள அட்டை பெரும் வைரலாகி தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு இணையவழி உறுப்பினர் சேர்க்கை பலனளிக்காமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் தி.மு.க மேலிடம் அப்செட் ஆகியுள்ளது.
சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அடையாள அட்டை பதிவுகள் மூலமாக ஆன்-லைன் முறையில் ஏராளமானேர் போலியாக தி.மு.க உறுப்பினராக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த பதிவிற்கு பதிலளித்து வரும் வலைத்தள பயனாளர்கள் என்னதான் அமெரிக்க அதிபராக இருந்தாலும் உதயநிதி ஒப்புதல் இல்லாமல் பதவி கிடைக்காது.
அடுத்த தி.மு.க செயற்குழு கூட்டத்திற்கு அமெரிக்க அதிபரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், போலி உறுப்பினர் அடையாள அட்டை வெளியான நிகழ்வு குறித்து சி.ஐ.ஏ விசாரணை நடத்திட வேண்டும் என கலாய்த்து வருகின்றனர். இது போன்ற காமெடி கலாட்டா நிகழ்வுகளால் தி.மு.க ஐ.டி.விங் நிர்வாகிகளும்,கட்சித் தொண்டர்களும் கலங்கி நிற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மடப்புரம் கோவில் காவலாளி மரணம்: த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
07 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.