முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சிவகங்கை : அம்மா அரசு மேற்கொண்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது.  மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் சிறப்பாக செயல்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இந்நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது.  இந்நோய் பரவல் குறைந்திருந்தாலும், மருத்துவ வல்லுநர்கள் மீண்டும் இது அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும், மழைக் காலமாக இருக்கின்ற காரணத்தினால் மேலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்கள். எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்நோய்ப் பரவல் குறைந்து வருகிறது. 

சிவகங்கை மாவட்டத்தில், இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவமனைகளும், படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருந்துகளும், உபகரணங்களும் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். 

இது ஒரு தொற்று நோய். ஆகவே, இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.     இம்மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரி குடிநீர் கிடைக்கப்பெறாத சிவகங்கை மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்ட மக்களுக்காக மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். சிவகங்கை மாவட்டத்திற்கு காவேரி குடிநீர் கிடைக்காமல் விடுபட்ட 11 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 2,459 ஊரகக் குடியிருப்புகளும், 8 பேரூராட்சிகளும், 3 நகராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளன.  சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.  சிவகங்கை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையிலுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.  குடிமராமத்துத் திட்டத்தைப் பொறுத்தவரை, 2016-2017 முதல் 2019-2020 வரை 236 கண்மாய்கள் தூர்வாரப்பட்டதில் 35,566 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட உப்பாற்றை சமப்படுத்துதல் மற்றும் அதன் குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைக்கும் பணி ரூபாய் 14.50 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 7,454 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. . சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடச் சாலைத் திட்டத்தின் கீழ் மேலூர்-திருப்பத்தூர் சாலையில் 16.26 கி.மீ சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துதல் மற்றும் 2.66 கி.மீ. நீளம் திருப்பத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் 110 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் பணி துவங்கப்படும். திருப்பத்தூர் ஆலங்குடி சாலை, மாத்தூர் முளக்குளம் சாலை, அரண்மனை சிறுவயல் சாலையில் ரூபாய் 20.16 கோடி மதிப்பீட்டில் 3 உயர்மட்டப் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 100-லிருந்து 150-ஆக உயர்த்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மருத்துவ மாணவர்களின் பட்ட மேற்படிப்பிற்காக முதுநிலை மருத்துவ மேற்படிப்புகள் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 65 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 66 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களில் 4,231 வீடுகளுக்கு ரூபாய் 8.85 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கான செயல்படக்கூடிய குடிநீர் இணைப்பு வழங்கிடும் பணிகளில் தற்போது வரை 749 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, எஞ்சிய வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  2016-2017, 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி மற்றும் மழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்திற்கு 96,109 விவசாயிகளுக்கு ரூபாய் 82.5 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு நன்மைகள் அம்மாவின் அரசு மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கிறது.     சிவகங்கை பையூர், முல்லைவாயல் கிராமங்களில் ரூபாய் 55.40 கோடி மதிப்பீட்டில் 608 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளன.     புதிய கால்நடை நிலையங்கள் கட்டுவதற்கு ரூபாய் 10.7 கோடி மதிப்பீட்டில் செயலாக்கம் செய்ய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூபாய் 3.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.   கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள ஆறாம் கட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான, தொன்மையான நாகரிகத்தை, பண்பாட்டை உலகறியச் செய்ய தமிழ்நாடு அரசால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, பல்வேறு திட்டங்கள் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை.  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்து வகைகளிலும் அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நோய்ப் பரவல் மேலும் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை திரும்ப அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து