எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சிவகங்கை : அம்மா அரசு மேற்கொண்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் சிறப்பாக செயல்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இந்நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. இந்நோய் பரவல் குறைந்திருந்தாலும், மருத்துவ வல்லுநர்கள் மீண்டும் இது அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும், மழைக் காலமாக இருக்கின்ற காரணத்தினால் மேலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்கள். எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்நோய்ப் பரவல் குறைந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவமனைகளும், படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருந்துகளும், உபகரணங்களும் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
இது ஒரு தொற்று நோய். ஆகவே, இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இம்மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரி குடிநீர் கிடைக்கப்பெறாத சிவகங்கை மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்ட மக்களுக்காக மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். சிவகங்கை மாவட்டத்திற்கு காவேரி குடிநீர் கிடைக்காமல் விடுபட்ட 11 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 2,459 ஊரகக் குடியிருப்புகளும், 8 பேரூராட்சிகளும், 3 நகராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. சிவகங்கை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையிலுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. குடிமராமத்துத் திட்டத்தைப் பொறுத்தவரை, 2016-2017 முதல் 2019-2020 வரை 236 கண்மாய்கள் தூர்வாரப்பட்டதில் 35,566 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட உப்பாற்றை சமப்படுத்துதல் மற்றும் அதன் குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைக்கும் பணி ரூபாய் 14.50 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 7,454 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. . சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடச் சாலைத் திட்டத்தின் கீழ் மேலூர்-திருப்பத்தூர் சாலையில் 16.26 கி.மீ சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துதல் மற்றும் 2.66 கி.மீ. நீளம் திருப்பத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் 110 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் பணி துவங்கப்படும். திருப்பத்தூர் ஆலங்குடி சாலை, மாத்தூர் முளக்குளம் சாலை, அரண்மனை சிறுவயல் சாலையில் ரூபாய் 20.16 கோடி மதிப்பீட்டில் 3 உயர்மட்டப் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 100-லிருந்து 150-ஆக உயர்த்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ மாணவர்களின் பட்ட மேற்படிப்பிற்காக முதுநிலை மருத்துவ மேற்படிப்புகள் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 65 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 66 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களில் 4,231 வீடுகளுக்கு ரூபாய் 8.85 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கான செயல்படக்கூடிய குடிநீர் இணைப்பு வழங்கிடும் பணிகளில் தற்போது வரை 749 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, எஞ்சிய வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2016-2017, 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி மற்றும் மழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்திற்கு 96,109 விவசாயிகளுக்கு ரூபாய் 82.5 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு நன்மைகள் அம்மாவின் அரசு மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கிறது. சிவகங்கை பையூர், முல்லைவாயல் கிராமங்களில் ரூபாய் 55.40 கோடி மதிப்பீட்டில் 608 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளன. புதிய கால்நடை நிலையங்கள் கட்டுவதற்கு ரூபாய் 10.7 கோடி மதிப்பீட்டில் செயலாக்கம் செய்ய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூபாய் 3.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள ஆறாம் கட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான, தொன்மையான நாகரிகத்தை, பண்பாட்டை உலகறியச் செய்ய தமிழ்நாடு அரசால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, பல்வேறு திட்டங்கள் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்து வகைகளிலும் அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நோய்ப் பரவல் மேலும் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை திரும்ப அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது
23 Oct 2025சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது என்றும் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த தமிழக அரசாணை வெளியீடு
23 Oct 2025சென்னை: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
23 Oct 2025சென்னை: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர்