முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்கோட் தாக்குதலில் 300 பேர் பலி : முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : பாலக்கோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300-க்கும்அதிகமானோர் இறந்ததாக, பாகிஸ்தான் தரப்பு முதல் முறையாக தெரிவித்துள்ளது. 2019 பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணமடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் இறந்ததாக இந்திய விமானப்படை கூறியது. 

ஆனால் அதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஒருவர் கூட பலியாகவில்லை. மணல் பகுதியில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியது. 

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி ஆஹ்கா ஹலாலி அஞ்டச் பாலக்கோட் தாக்குதல் பற்றி டிவி விவாத நிகழ்ச்சியில் பேசினார்.

இந்திய விமானப்படை தாக்குதலில் 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். எல்லையில் நிலைமை மோசமாகிவிடக்கூடாது என்பதற்காக யாரும் பலியாகவில்லை என்று அப்போது பொய் சொல்லப்பட்டது என்று  ஹிலாலி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து