முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதியாக மார்சிலோ ரெபெலோ டிசோசா இருந்து வருகிறார். வருகிற 24-ந் தேதி அந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் 72 வயது பூர்த்தியான டிசோசா இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முடிவில் இருக்கிறார். 

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இதன் பின்னர் நடந்த ஆன்டிபாடி பரிசோதனை முடிவிலும் பாதிப்பு இல்லை என முடிவானது. 

ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றால் டிசோசா பாதிக்கப்பட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனை அவரது அதிகாரப்பூர்வ வலைதளம் உறுதி செய்துள்ளது. 

இதனை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் அவர் கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து