எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதில் 13 மாணவர்கள் முழு மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,45,045 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர்.
13 மாணவர்கள் முதலிடம்
இந்த ஆண்டு 1,39,033 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 87291 பேர் மாணவர்கள். 51730 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் 13 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
440 கல்லூரிகள் பங்கேற்பு
தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன.
இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள் குறைந்துள்ளன. விண்ணப்பித்தவர்களைவிட இடங்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மாணவர்கள் தங்களுடைய தரவரிசைப் பட்டியலைக் காண: https://www.tneaonline.org/ என்ற முகவரியைக் காணலாம்.
440 கல்லூரிகள் பங்கேற்பு
நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழகத்தில் இருந்து 529 பொறியியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் விண்ணப்பித்திருந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்காததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அங்கீகார விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. மேலும், போதிய உள்கட்டமைப்பு, ஆசிரியர் தகுதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏ.ஐ.சி.டி.இ. மறுத்து விட்டது. இதனால், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன. அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது 11 ஆயிரத்து 284 பொறியியல் இடங்கள் குறைந்துள்ளது.
கவுன்சிலிங் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைனில் இன்று கவுன்சிலிங் துவக்கம்
மாணவர்கள் தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆன்-லைனில் நடைபெறும். முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2,060, விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,190, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,124, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்த 182 மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது.
18-ல் முதல்வர் அனுமதி கடிதம் வழங்குகிறார்
அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 18-ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கடிதங்களை வழங்குவார்.
5 கட்ட கலந்தாய்வு
வழக்கமாக அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படுவதால் காலியாகும் இடங்கள் காலியாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இடங்கள் காலியாவதை பொறுத்து 5 கட்டங்களாக கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இடங்கள் குறைவாக இருந்தாலும் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு பள்ளி மாணவர்களில் 11 ஆயிரத்து 390 பேருக்கு இடம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பிரான்ஸ் அதிபர் வரவேற்ற பிரதமர் மோடி
17 Feb 2026மும்பை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார்.
-
3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை..!
17 Feb 2026புதுடெல்லி, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
'வித் லவ்' பட தயாரிப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
17 Feb 2026சென்னை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை “வித் லவ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 17) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.,யில் மாணவர் சேர்க்கை 97 சதவீதமாக உயர்வு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வேளாண்மை மற
-
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள்: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
17 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2030 - ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
17 Feb 2026சென்னை, வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 2.55 கோடி பேர் பயன்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
17 Feb 2026சென்னை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
21 மாவட்டங்களில் முகாம்கள் மூலம் 1,929 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர்
17 Feb 2026சென்னை, தமிழகத்தில் இதுவரை 21 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
ரூ.5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்திய போது தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது: அமைச்சர்
17 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடி திட்டம் என்றும் ரூ.5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்திய போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது என்று
-
விடியல் பேருந்துகளில் பெண்கள் 881 கோடி முறை பயணம் தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் 881 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர் என்றும்
-
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Feb 2026சென்னை, தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சம் பேர் பயன்: இடைக்கால பட்ஜெட்டில் தகவல்
17 Feb 2026சென்னை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.



