எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ராஜீவ் காந்தி கொலை கைதிகள் ஏழு பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை குறித்து செய்தியாளர்களிடையே பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியின் பதிலைப் பார்க்கும்போது 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யப் பரிந்துரைத்து 09-09-2016 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, 07-01-2019 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 116 நாட்கள் கடந்துவிட்டன என்றும், இந்த ஏழு பேரின் விடுதலை குறித்துத் தமிழக ஆளுநர் இதுவரையில் எந்த முடிவையும் எடுக்காமல், அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்து, அமைச்சரவையில் எடுத்த முடிவை இப்படிக் காலவரையின்றி ஆளுநர் தன்னிடமே வைத்துக் கொள்வது, மக்களாட்சியினுடைய மாண்புக்கு விரோதமானது இல்லையா என்று வினவினார்.
அது மட்டுமல்லாமல், 02-02-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற ஆரம்பிக்கும்போது, ஏழு பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தப் பிரச்சினையில் அ.தி.மு.க. போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக, ஏழு பேர் விடுதலை குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், 19-05-2021 அன்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். முதல்வர் கடிதம் எழுதி 124 நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது பொது மக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், "ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக, முந்தைய ஆளுநரால் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், புதிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது" என்று சட்ட அமைச்சர் தெரிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. அமைச்சரின் பேட்டியைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினையையும் நீட் பிரச்சினை போலத் தி.மு.க. அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டதோ என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது.
எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, தனிப்பட்ட முறையிலும், தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும் மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தத்தைக் கொடுத்து, தி.மு.க.வி.ன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழு பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
நாட்டில் 2027-ல் புல்லட் ரயில் சேவை தொடங்கும்: மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்
01 Jan 2026புதுடெல்லி, நாட்டில், முதல் புல்லட் ரயில் சேவையானது வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் வழித்தடம் எது? மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்
01 Jan 2026புதுடெல்லி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொல்கத்தா – கவுகாத்தி இடையே இயக்கப்பட உள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.



