எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர ஒயாது உழைப்போம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். சபதம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆ.ரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழா கொண்டாடுகிறது.
அ.தி.மு.க. 17.10.2021 அன்று 49 ஆண்டு கால வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 50-வது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதையும், இந்தப் பொன் விழா ஆண்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரும் பாக்கியம் எனக்கு இறைவனால் அருளப்பட்டிருக்கிறது என்பதையும் நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நினைவில் கொள்கிறேன்.
கட்சி பணியாற்றிய நேரத்தில் உயிர் நீத்த உத்தமத் தொண்டர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். கட்சியை உயிரினும் மேலாய் மதித்து வாழும் தொண்டர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசியல் வரலாற்றை உற்று நோக்கிப் பார்த்தால், ஏதோ ஒரு கணக்கோடுதான் அரசியல் கட்சிகள் தோன்றுகின்றன. ஆனால், கணக்கு கேட்டதற்காக, ஊழலைத் தட்டிக் கேட்டதற்காகப் பிறந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. அதனால் தான், தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில் திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலைச் சந்தித்து வெற்றி வாகை சூடி வரலாற்று அதிசயத்தைப் படைத்தது.
இதன் தொடர்ச்சியாக, 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய தி.மு.க. ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. புரட்சித் தலைவரின் ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்ற தி.மு.க.வின் சதித் திட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை செல்லுபடியாகாமால் இருந்தது.
அவரின் மறைவிற்குப் பிறகு, சில துரோகிகளின் துணையோடு கட்சியை அழிக்க நினைத்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதன் விளைவு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. “சிங்கத்தின் குகைக்குள் பிளவு வந்தால் சிறு நரிகள் நாட்டாமையாகிவிடும்' என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அதன் விளைவாக மக்கள் விரோத ஆட்சி மீண்டும் உருவானது. கட்சி பிளவுபட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், சேவல்' சின்னத்தில் தனியாகக் களம் கண்டு, தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்து எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை அவரை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பிளவுபட்ட கட்சி மீண்டும் ஒன்றிணைந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து, 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான அம்மா ஆட்சிக் காலத்தில், தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியது, மகளிருக்கு என்று தனிக் காவல் நிலையங்களை உருவாக்கியது, உலகத் தமிழ் மாநாட்டினை நடத்திக் காட்டியது, உலகத் தரம் வாய்ந்த நேரு விளையாட்டு அரங்கத்தை கட்டியது, காவல்துறையை நவீனமயமாக்கியது என பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன.
1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக நெருப்பாற்றிலே நீந்தி, சவால்களை எதிர்கொண்டு, தடைக்கற்களை தகர்த்தெறிந்து, 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சியை அமோக வெற்றி பெறச் செய்து, இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
2001 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி நல்கிய அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவது கடினம்என்று உணர்ந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி2006-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். இருப்பினும், தி.மு.க. தலைமையில் மைனாரிட்டி ஆட்சிதான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்ற பெருமையை பெற்றது.
2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக மீண்டும் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகள் காரணமாக ஆட்சி நம்மைவிட்டு கைநழுவிப் போய்விட்டது.
போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., எந்தெந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்களோ அவற்றை நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில், விடியலை நோக்கி எனப் பிரச்சாரம் செய்துவிட்டு இன்று விடியா அரசாக காட்சி அளிக்கிறது. சட்டப்பேரவை அடுத்த வாரிசின் புகழ்பாடும் மன்றமாகிவிட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு குடும்பத்தின் பிடியில் தி.மு.க. சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பதுபோல தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
அ.தி.மு.க. தோன்றி 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன் விழா ஆண்டு தொடங்கும் இப்பொன்னாளில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடு, அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஒயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போம்.
இவ்வாறு ஓ.பி.எஸ்.தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.