முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் கொரோனா: ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை : புடின் அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புடின் அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இப்போது மற்றொரு வல்லரசு நாடான ரஷ்யாவும் கொரோனாவின் ஆதிக்கத்துக்கு ஆளாகி உள்ளது. அதுவும் இங்கு கொரோனா வைரஸ் இறக்கை கட்டி பறக்கிறது என்று சொல்லத்தக்க விதத்தில் ஒவ்வொரு நாளும் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆயிரத்துக்கு அதிகமானோர் இறக்கின்றனர்.

நேற்று முன்தினம் காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 446 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புடின் அரசு அறிவித்துள்ளது. வரும் 30-ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 7-ம் தேதி வரையில் அங்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு பிராந்தியமும் நிலைமைக்கேற்ப முன்கூட்டியே விடுமுறையைத் தொடங்கவும், முடியும் தேதியை நீட்டிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மாஸ்கோவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 80 சதவீத மக்கள் தடுப்பூசி போடுகிற வரையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ரஷ்யாவில்தான் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு மூன்றில் ஒருவர்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தற்போதுதான் அங்கு தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்துள்ளது. தினமும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தினமும் 1.20 லட்சம் தடுப்பூசிதான் போடப்பட்டது.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் போலி தடுப்பூசி சான்றிதழ்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  கடந்த திங்களன்று முதல் அங்கு நர்சுகளிடமும், டாக்டர்களிடமும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.  இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டல்களை மூடுமாறு உத்தரவிடுமாறு பிராந்திய தலைவர்களை அதிபர் புடின் அறிவுறுத்தி இருக்கிறார்.  மாஸ்கோ நகர மேயர் செர்கெய் சோபியானின், அங்கு இன்று 28-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரையில் பகுதி நேர ஊரடங்கு போட்டுள்ளார். 30-ம் தேதி தொடங்கி ஒரு வார விடுமுறை காலத்தில் அதிபர் புடின் யாரையும் நேருக்கு நேர் சந்திக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து