முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் கிராம மக்கள் 70 பேர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் என்ற நாட்டில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு நகரின் மேயர் உள்பட அப்பாவி பொதுமக்கள் 70 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

நைஜீரியா பாலி, புர்கினோ ஆகிய நாடுகளின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நைஜர் நாடு உலகின் மிகவும் வறுமை மிக்க நாடாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். இங்கு அரசின் பாதுகாப்புப்படையை எதிர்த்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எல்லை அருகே உள்ள அடாப்தாப் என்ற கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் புகுந்து சுட தொடங்கினர். இதில் தில்லாபெரி நகர மேயர் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 137 பேர் உயிரிழந்தனர். ஆகஸ்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதே தில்லாபெரி பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து