முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவுகள் நிறுத்தம்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

அம்மா உணவகங்களில்  இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவுகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டன. மேலும் மழைக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலேயே உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்தார். சென்னையில் கடந்த வாரம்  பெய்த அதிக  கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்டது . பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால்  அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.  

 

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மழை காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில்  இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே அம்மா  உணவகங்களில் காலை , மதியம் , மாலை என மூன்று வேளையும் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு மீண்டும் மலிவு விலையில் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து