எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கை இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அனைத்து கோவில்களின் தணிக்கை அறிக்கைகளும் இரு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
இதேபோல, கோவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக ரங்கராஜன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்தார். மேலும், குழுக்கள் அமைக்கப்பட்டு, அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார். இதை ஏற்று வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


