LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவையை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல்நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அனைத்து எம்.பி.க்களையும் முதல்நாளில் வர வேண்டும் என்று பா.ஜ.க கொறடாமூலம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோலவே கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதா, திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்கள் தவறாது அவைக்கு வர வேண்டும் என கொறடா மூலம் உத்தரவி்ட்டிருந்தனர்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாகவும், மக்கள் விரோத மசோதாக்கள் தாக்கல் செய்யாமல் தடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக அமளியில் ஈடுபட்டன. சபாநாயகரின் இருக்கை அருகே கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து அவை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்தார். மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் வெஜிடபிள்![]() 1 day 6 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 9 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 9 hours ago |
-
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது
11 Aug 2022தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 11-08-2022.
11 Aug 2022 -
போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
11 Aug 2022போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கொரோனாவை வென்று விட்டோம்: வடகொரிய அதிபர் கிம் பெருமிதம்
11 Aug 2022கொரோனாவை வென்று விட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
-
75-வது சுதந்திர தின விழா: சென்னையில் நடந்த 2-வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி
11 Aug 2022நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று 2-வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
-
75-வது சுதந்திர தினம்: சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலைநிகழ்ச்சி
11 Aug 2022சென்னை: 75-வது சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
-
பொறியியல் படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்கள் 22,000 பேர் விண்ணப்பம்
11 Aug 2022பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக 22 ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
-
குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்: உலக சுகாதார அமைப்பு கவலை
11 Aug 2022குரங்கு அம்மை நோய் பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
-
உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்தது கராச்சி
11 Aug 2022பாகிஸ்தானின் கராச்சி நகரம் உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
-
உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
11 Aug 2022உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பிரதமர் மோடி உட்பட 3 பேர் அடங்கிய சர்வதேச அமைதி ஆணையம் அமைக்க ஐ.நா.வுக்கு மெக்ஸிகோ அதிபர் பரிந்துரை
11 Aug 2022மெக்ஸிகோ சிட்டி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 169-வது நாளை எட்டியது. போரால் உக்ரைனை சேர்ந்த 1.2 கோடி பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
-
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டு பத்திரம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
11 Aug 2022சென்னை தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திரு
-
பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு
11 Aug 2022சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாட்டிய நாடகம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
11 Aug 2022சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6.00 மணியளவில் முதல்வர் மு.க.
-
காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: தமிழக வீரர் உள்பட 3 பேர் வீர மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
11 Aug 2022ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தொடர்ந்து 26-வது நாளாக நீடிக்கும் : மேட்டூர் அணையின் நீர்மட்டம்
11 Aug 2022சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
-
ஓணம் பண்டிகை: சென்னை , நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
11 Aug 2022சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: பிரச்சார குறும்படத்தையும் துவக்கி வைத்தார்
11 Aug 2022சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்
-
முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் தங்கப்பொருள் கண்டுபிடிப்பு
11 Aug 2022செய்துங்கநல்லூர்: முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
11 Aug 2022சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
-
மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு: இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
11 Aug 2022இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர் நாட்டை விட்டு வ
-
இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை
11 Aug 2022இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது ஐகோர்ட்டு
11 Aug 2022சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.
-
14-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜெகதீப் தங்கர் ஜனாதிபதி திரெளபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
11 Aug 2022புதுடெல்லி: நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீப் தங்கர் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
வேலூரில் அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர் போலீசாரால் கைது - ஒப்பந்தமும் ரத்து
11 Aug 2022வேலூர்: வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.