முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள்: இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி இணைந்தனர்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜோகனர்ஸ் பர்க்: வாஷிங்டன் சுந்தர் விலகல் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் புதிதாக 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வரும் 19-ம் தேதி... 

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

2 புதிய வீரர்கள்...

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியில் புதிதாக 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இரு வீரர்களும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.

உத்தேச பட்டியல்:

கேஎல் ராகுல் (கேப்டன்), பும்ரா, தவான், கெய்குவாட், கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஹால், ரவிசந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து