முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான 'திருப்புதல் தேர்வு' ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 907 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில்  புதுச்சேரியில் வரும் 19 ஆம் தேதி 10,12- ம் வகுப்புகளுக்கு தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.  கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்புதல் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று புதுச்சேரியிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து