எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம், சென்னையில் இருந்து பா.ம.க. தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:- சென்னையில் இருந்து பா.ம.க. தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பா.ம.க.வின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில் தான் செயல்படுகிறது. சென்னையிலோ வேறு பகுதியிலோ தலைமை அலுவலகம் வைத்திருந்தால் அது சட்டத்திற்கு புறம்பானது.
பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது. கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்
சிறப்பு பொதுக் குழுவின்படி பா.ம.க.வின் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை 'தலைவர்' எனக் கூறி கொண்டால் நடவடிக்கை பாயும். என்னை தவிர யாரும் உரிமை கோர முடியாது. மே மாதம் முதல் பா.ம.க.வின் தலைவர் ராமதாஸ், கவுரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அண்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பட்டு உள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யாராவது, 'நான்தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
பா.ம.க. கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது, என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம். அன்புமணியின் நடைப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


