முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் வாபஸ்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று மற்றும்  உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் பதிவாகி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது.  இதனால் அந்நாட்டில்   பிரதமர் போரிஸ் ஜான்சன் சில கட்டுப்பாடுகளை அறிவித்தார். 

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என  பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.  மேலும் வீட்டில் இருந்து பனி புரிந்தவர்கள் இனி  வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை  இல்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.  கட்டாய முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து