எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘மல்டி-பேண்ட்' ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஜிசாட்-7' (ருக்மினி) உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது. நாட்டின் கடற்படை நடவடிக்கைகளை கணிசமாக ஜிசாட்-7 என்னும் ருக்மினி செயற்கைக்கோள் மேம்படுத்தி வந்தது.
ருக்மினி செயற்கைக்கோள் இந்திய கடற்படைக்கு தகவல் தொடர்பு திறன்களை திறம்பட வழங்கி உள்ளது. இந்தநிலையில் புதிய ரக ஜிசாட்-7 ஆர் (சி.எம்.எஸ்-02) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப இந்திய கடற்படை கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி இஸ்ரோவிடம் கேட்டுக்கொண்டது.
இதனை தற்போது இஸ்ரோ தயாரித்து சோதனைகளை முடித்து உள்ளது. இதனை எல்.வி.எம்-3 எம்-5 என்ற ராக்கெட் மூலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-வது வாரம் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக பணியில் இறங்கி உள்ளனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


