எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2021-ம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியில் இந்திய அணி வீரர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐ.சி.சி ஒருநாள் அணி, டி20 அணியில் ஒரு இந்திய வீரர்கூட இல்லாத நிலையில் டெஸ்ட் அணியிலாவது 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளது ஆறுதல் அளிக்கிறது.
பும்ரா இல்லை...
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். ஆனால், வேகப்பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட முகமது ஷமி, பும்ரா இடம் பெறாதது வேதனைக்குரியது. பேட்ஸ்மேன்களில் கடந்த ஆண்டில் ரஹானே, புஜாரா, விராட் கோலி, ராகுல் என ஒருவர் கூட சிறப்பாகச் செயல்படவில்லை. எந்தத் தொடரிலிருந்தும் நிலைத்தன்மையுடன் ஆடவில்லை என்பதற்குச் சான்றுதான் ஐ.சி.சி அணியில் நிராகரிக்கப்பட்டது.
கோலி இல்லை...
இதே ஐ.சி.சி அணியில் தொடர்ந்து 3 ஆண்டுகள் விராட் கோலி இடம் பெற்றிருந்தார், கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், முதல் முறையாக இந்த ஆண்டு கோலி இடம் பெறவில்லை. 2015-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை ஐ.சி.சி அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின் 2018, 2019-ம் ஆண்டில் இடம்பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இடம் பெற்றுவிட்டார்.
ரோகித் சர்மா...
ஐ.சி.சி சார்பில் அறிவிக்கப்படும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகத் தொடர்ந்து 3 ஆண்டுகள் நியமிக்கப்பட்ட கோலி ஒரே ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டும், அணியிலிருந்தும் தூக்கப்பட்டிருப்பது அவரின் பேட்டிங் திறமையையும், கேப்டன்ஷிப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ரோஹித் சர்மா கடந்த ஆண்டு 906 ரன்கள் சேர்த்து 47.68 சராசரி வைத்துள்ளார். சென்னை, மற்றும் ஓவல் மைதானத்தில் இரு சதங்களையும் சர்மா பதிவு செய்ததையடுத்து இடம் பெற்றுள்ளார்.
ரிஷப் பந்த்...
ரிஷப் பந்த் 2018-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஐ.சி.சி அணியில் இடம் பெற்றுள்ளார். 12 போட்டிகளில் 748 ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த் 39.36 சராசரி வைத்துள்ளார். அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த அருமையான சதம், 23 இன்னிங்ஸில் 39 டிஸ்மிசல்கள் போன்றவை அவரை மீண்டும் இடம் பெறச்செய்தன.
ரவிச்சந்திரன் அஸ்வின்...
ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் நியூஸிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை அஸ்வின் ஏற்படுத்தினார். பேட்டிங்கிலும் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் உள்ளிட்ட 335 ரன்களைச் சேர்த்துள்ளார்.
வில்லியம்ஸன்...
இவர்கள் தவிர இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாவுஷேன், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தான் வீரர் பவாத் ஆலம், நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிஸன் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் இடம் பெற்றனர். ஐ.சி.சி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி 2021 டெஸ்ட் அணி:
திமுத் கருணாரத்னே (இலங்கை), ரோஹித் சர்மா (இந்தியா), கானே வில்லியம்ஸன் (நியூஸி), மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.), ஜோ ரூட் (இங்கிலாந்து), பவாத் ஆலம் (பாகிஸ்தான்), ரிஷப் பந்த் (இந்தியா), அஸ்வின் (இந்தியா), கைல் ஜேமிஸன் (நியூஸி) ஷாகின் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹசன் அலி (பாகிஸ்தான்).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: இ.பி.எஸ். உறுதி
12 Jul 2025சென்னை : ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
-
10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
12 Jul 2025சென்னை, காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் கூறி உள்ளார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.