முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் விலை 139 டாலராக உயர்வு: பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு !

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 139 டாலராக உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அதிகாரத்தை கடந்த 2017-ம் அண்டு மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அதன் பிறகு தினமும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அடிக்கடி விலை அதிகரிக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து ரூ.110 வரை விற்கப்பட்டது. அதே நேரத்தில் டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது. அதன் பிறகு பெட்ரோல்-டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்டதால் அதன் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. நேற்றுடன் 127-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயராமல் உள்ளது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்கப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 139 டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பிறகு இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வந்தன. இந்த ஆலோசனையில் பெட்ரோல்-டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.6 வரை உயர்த்தலாம் என்று முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. பெட்ரோல்-டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தாமல் தினமும் 50 காசுகள் என்ற அளவில் படிப்படியாக உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து