முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு புதிய வாகனங்கள் : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
CM-1 2022 05 04

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித் துறையின் தலைமைக் கட்டிடக்கலைஞர், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 புதிய சீருந்துகள்  மற்றும் 22 புதிய ஈப்புகளை வழங்கிடும் அடையாளமாக 5 வாகனங்களை வழங்கினார்.

2021-2022-ம் ஆண்டிற்கான பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையில், தலைமை கட்டிட கலைஞர், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்களுக்கு பழைய வாகனங்களுக்கு பதிலாக  புதிய சீருந்துகள் மற்றும் ஈப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, 2 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 7 புதிய சீருந்துகள் மற்றும் 22 புதிய ஈப்புகள் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுப்பணித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து