எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி, அயலக மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பயிற்சிக்கான இணைய முகமை வெளியிட்டு பேசினார்.
அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலோடு, தொடர்ச்சியாக பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியர்கள் அனைவரும் ஒருவர் கூட பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவர்களுக்கு படிப்படியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியில் சேர்ந்த செவிலியர்கள் யாருக்கும் இந்தியாவில் வேறு மாநிலங்களில் பணிநிரந்தரம் என்பதோ அல்லது அவர்களை அரசுப் பணியில் இணைத்துக் கொண்டது என்பதோ இதுவரை இல்லை. ஆனால் நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் தற்காலிகமாக கொரோனா காலங்களில் பணியமர்த்தியவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்கின்ற வகையில், ஒருவர் கூட கொரோனா காலங்களில் பணியாற்றியவர்கள் விடுபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து ஏற்கெனவே அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களை வழங்கி, 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களை பணியில் அமர்த்தி கொண்டார்கள்.
அந்த வகையில்கொரோனா காலங்களில் தற்காலிகமாக பணியில் இணைந்தவர்கள் 2,814 பேர், இதில் 2,146 பேருக்கு ஏற்கெனவே மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமிருந்த 719 பேருக்கு அவர்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்கு நிறைய குளறுபடிகள் இருந்தது, அவர்களுக்கு ஒப்பந்த பணிநியமன ஆணைகள் தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது.
தமிழ்நாடு முதல்வருக்கு பணிநியமன ஆணைகள் தர வேண்டும் என்று அறிவுறுத்தியதன் காரணமாக, அவர்களை தனித்தனியாக வரவழைத்து அவர்களுக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டடு 668 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 59 பேருக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களும் பணிநியமன ஆணைகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் 2014-ம் ஆண்டு தொடங்கி தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களை இந்த அரசு படிப்படியாக அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2014 முதல் 2021 முன்பு வரை 7 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 1871 பேருக்கு தான் பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டது. ஆனால் நமது தமிழ்நாடு முதல்வர், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது போல அதனை முழுமையாக நிறைவேற்றிடும் வகையில் 5 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் 5,825 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர பணி ஆணைகள் பெற்றிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


