முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      உலகம்
China 2022 05 06

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய சீனா பகுதியில் உள்ள சாங்சா நகரில் குடியிருப்புகளுடன் கூடிய வணிக வளாக கட்டிடம் உள்ளது. 6 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.  இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.

இது பற்றி அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இரவு பகலாக இந்த மீட்பு பணி நடந்தது. ராட்சத இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பரிதாபமாக இறந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  மேலும், கட்டிட விபத்து தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து