முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் புழுதிப்புயல் ஏற்பட வாய்ப்பு: வானிலை மையம் ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      இந்தியா
sun-2022-04-29

Source: provided

புது டெல்லி : வடமாநிலங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ராஜஸ்தானில் 119 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது. அதனால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. தலைநகர் டெல்லியில் 47 டிகிரி, ஜம்முவில் 43.5 டிகிரி, அரியானாவில் 46.8 டிகிரி, பஞ்சாப்பில் 46 டிகிரி, ராஜஸ்தானில் 48.5 டிகிரி (119.3 டிகிரி பாரன்ஹீட்) என்ற அடிப்படையில் வெப்பக்காற்று வீசுகிறது. அதனால் ராஜஸ்தானின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கடந்த 1951-ம் ஆண்டிக்கு பின்னர் டெல்லியில் ஏப்ரல் மாத சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரியாக பதிவானது. இன்று டெல்லியில் இடியுடன் கூடிய மழை அல்லது புழுதிப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இன்று 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சில இடங்களில் ஆலங்கட்டி புயலுடன் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து