முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் இதுவரை 88 சதவிகிதம் பேருக்கு கொரோனா 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 28 மே 2022      இந்தியா
Mansuk-Mandavia 2022 01 02

இந்தியாவில் 88 சதவீதம் பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. இதற்கிடையே, நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை தற்போது 193 கோடியைக் கடந்துள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 88 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியிருப்பதாவது, "18 வயது நிரம்பியவர்களில் 88 சதவீதத்துக்கும் அதிகமானோர் இப்போது கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். வாழ்த்துகள் இந்தியா! தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா குறித்த பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுங்கள்" என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கையானது, நேற்று நிலவரப்படி 193.13 கோடிக்கும் அதிகமான (1,93,13,41,918) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-59 வயது உடையவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10, 2022 அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து