LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடி வெற்றி பெற்றுள்ளது. 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் லண்டனில் நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடி சானியா மிர்சா - பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்சே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஜோடியை வீழ்த்தியது.
_______________
டி-20 கேப்டன் பதவி: தினேஷ்கார்த்திக் நன்றி
இங்கிலாந்தில் கவுண்டி மற்றும் நார்த்தாம்டன்ஷையர் அணிகளுக்கு எதிரான பயிற்சி டி20 போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பல வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளேன்.
முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பயிற்சி போட்டிதான். இருப்பினும் இதில் கேப்டன் பதவி கிடைத்திருப்பதை நினைத்து பெருமையாக உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
_________________
நியூசி., வீரர் மிட்செலுக்கு கொரோனா தொற்று உறுதி
நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிச்சேல் சான்ட்னருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு சென்று அங்கு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 அணிக்கு கேப்டனாக அந்த அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அயர்லாந்து தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் ஜூர்கென்சன் கூறுகையில், ``சான்ட்னர் தற்போது நலமுடன் இருக்கிறார். அயர்லாந்து தொடருக்கு அவர் அணியில் இணைவது என்பது தற்போது உறுதிப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது. அவர் முழுவதுமாக குணமடைந்த பிறகு அணியில் இணைவார்’’ என்றார்.
_____________
இங்கிலாந்தில் சதம் அடிப்பது மிக பெரிய விஷயம்: ஜடேஜா
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவிக்கையில்., இங்கு சதம் அடித்ததால் நான் மிகவும் நன்றாக உணர்கிறேன், இந்தியாவுக்கு வெளியே அதைச் செய்வது, குறிப்பாக இங்கிலாந்தில் ஒரு வீரராக சதம் அடிப்பது மிகவும் பெரிய விஷயம், இங்கிலாந்தில் உடலுக்கு நெருக்கமாக விளையாட வேண்டும். பந்து இங்கே ஸ்விங் ஆகிறது, எனவே கவர் அல்லது ஸ்கொயர் டிரைவ் விளையாட விரும்பினால், கார்டனுக்கு எட்ஜ் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அதிக பந்துகளில் விளையாடாமல் இருப்பதில் எனது கவனம் இருந்தது.
அது இங்கு ஒருபோதும் எளிதானது அல்ல. நானும் ரிஷப்பும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம், நாங்கள் ஒரு நீண்ட பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றோம். நான் பேட்டிங் செய்ய வந்தபோது அணியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது, நாங்கள் ஒரு நல்ல ஸ்கோர் எடுத்துள்ளோம் என்று நம்புகிறேன்.
_______________
இங்கிலாந்து அணியை கலாய்த்த வாசிம் ஜாஃபர்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதத்தின் துணையுடன் 416 ரன்களை குவித்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர், இங்கிலாந்து அணியை கலாய்த்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றதை மதுபோதையுடன் கொண்டாடிய அந்த அணியின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் கெவின் பீட்டர்சனின் புகைப்படத்தை பகிர்ந்து, 'உங்கள விட high தான்' என கலாய்த்துள்ளார்.
________________
ரிஷப் பண்ட்டை புகழந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 111 பந்தில் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார்.
இந்த நிலையில் அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பாராட்டு தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறியதாவது : அவர் விக்கெட் கீப்பர்களின் பிரையன் லாரா. வார்விக்ஷயர் அணிக்காக பிரையன் லாரா 501 ரன்கள் குவித்த அதே இடமான பர்மிங்காமில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. பண்ட் அந்த போட்டியின் காட்சிகளைக் கண் முன் கொண்டுவந்துள்ளார். அவர் பேட்டிங்கின் போது குறைந்த கால் அசைவைக் கொண்டிருக்கிறார். இருப்பினும் பந்தை நன்றாக எதிர்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 2 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 4 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 1 day ago |
-
75-வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார் : விருதுகள், பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார்
14 Aug 2022சென்னை : நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.
-
பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு
14 Aug 2022சென்னை, ஆக. 15- பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் : தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி கோருகிறார்
14 Aug 2022சென்னை : சென்னையில் இருந்து நாளை 16-ம் தேதி இரவு முதல்வர் மு.க.
-
75-வது சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து
14 Aug 2022சென்னை ; நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க.
-
பிரீமியர் லீக் கால்பந்து போட்டி: மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி
14 Aug 2022பிராண்ட்போர்ட் : 2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.இதில் பிரண்ட்போர்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரண்ட்போர்ட் - மான்ச
-
சென்னை அருகே துயர சம்பவம் : கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்
14 Aug 2022சென்னை ; திருவொற்றியூரில் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
-
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் தோனி ஆலோசகராக செயல்பட பிசிசிஐ மறுப்பு?
14 Aug 2022மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது.
-
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை விரட்டியடித்த தலிபான்கள்
14 Aug 2022காபூல் ; காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன.
-
20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் - ரிக்கி பாண்டிங்
14 Aug 2022புதுடெல்லி : 20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
-
அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Aug 2022மதுரை : மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சரோஜ் நாராயணசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Aug 2022சென்னை : பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா- மேடிசன் இணை அரையிறுதியில் தோல்வி
14 Aug 2022ஒட்டாவா : ஒட்டாவா, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-14-08-2022
14 Aug 2022 -
சென்னையில் காந்தியின் திருவுருவ சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
14 Aug 2022சென்னை : தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை இன்று காலை 10.30 மணியளவில்
-
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகல்
14 Aug 2022வாஷிங்டன் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
-
பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
14 Aug 2022புதுடெல்லி பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என சுதந்திர தின உரையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
-
கேலோ இந்தியா யு-16 மகளிர் ஹாக்கி லீக் போட்டி ஆகஸ்ட் 16-ம் தேதி தொடக்கம்
14 Aug 2022புதுடெல்லி : கேலோ இந்தியா 16 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஹாக்கி லீக் டெல்லியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி யு -16 மகளிர் ஹாக்கி லீக் முதல் கட்ட போட்டிகள் வரு
-
பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
14 Aug 2022ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிமோனா ஹாலேப்
14 Aug 2022டொரண்டோ : கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
-
சல்மான் ருஷ்டியை தொடர்ந்து ஹாரி பாட்டர் எழுத்தாளருக்கும் டுவிட்டரில் கொலை மிரட்டல்
14 Aug 2022லண்டன் ; அமெரிக்காவில் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு? - காங்கிரசுக்கு 4 மந்திரிகள்
14 Aug 2022பாட்னா : பீகாரில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாகவும், காங்கிரசுக்கு நான்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம்: அமெரிக்காவில் தேசிய கொடியை ஏற்றும் இந்திய போர்க்கப்பல்
14 Aug 2022புதுடெல்லி : நாடு முழுவதும் இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
-
அமெரிக்காவில் விமானத்தை இயக்கி அசத்திய தாய், மகள் வலைதளங்களில் வீடியோ வைரல்
14 Aug 2022வாஷிங்டன் ; அமெரிக்காவில் பைலட்டுகளாக பணிபுரியும் தாய், மகள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டி அசத்தி இருக்கிறார்கள்.
-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசிய கொடியேற்றுகிறார் : முப்படை தளபதிகள் உட்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு
14 Aug 2022புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார்.
-
புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு தொகுப்பு : ஒடிசா அரசு முடிவு
14 Aug 2022புவனேசுவரம் : ஒடிசாவில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.