முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 1,057 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
India-Corona 2022-07-23

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று ஆண்கள் 637, பெண்கள் 420 என மொத்தம் 1,057 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் 234 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து ,52,698ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 04,776 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் 1,429 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 9,889 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று பாதிப்பு 1,094 ஆகவும், சென்னையில் 239 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து