முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      தமிழகம்
dam--------2022-08--11

Source: provided

சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, 2022-2023  ஆம் ஆண்டின் முதல் போக  நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் இரட்டைப்படை  மதகுகள் மூலமாக   12.08.2022 முதல் 09.12.2022 வரை 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு   மிகாமல் தண்ணீர்  திறந்துவிட  அரசு ஆணையிட்டுள்ளது.   இதனால் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து