முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைசர் நிறுவன சி.இ.ஓ.-வுக்கு 2-வது முறையாக கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Albert 2022-09-25

Source: provided

நியூயார்க்: பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லாவுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பெர்ட் போர்லாவுக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட் என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்து கொண்டார். இந்நிலையில், அவருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் நன்றாகவே உள்ளேன். கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவுமின்றி காணப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

வயது முதிர்ந்த நோயாளிகள் போன்ற, அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு பேக்ஸ்லோவிட் தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். பைசர் மற்றும் அதன் ஜெர்மன் நாட்டு பங்குதாரரான பையோஎன்டெக் நிறுவனத்தின் உற்பத்தியான கொரோனா தடுப்பு மருந்தின் 4 டோஸ்கள் போர்லாவுக்கு அளிக்கப்பட்டு உள்ளன. எனினும், புதிய வகை ஈரிணை திறம் வாய்ந்த பூஸ்டர் தடுப்பூசியை இன்னும் எடுத்து கொள்ளவில்லை என போர்லா கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து