எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக பொதுத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
வரும் ஜனவரியில்...
இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதேபோல், பாஜக ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இமாசல்லுக்கு....
எனவே, இவ்விரு மாநிலங்களின் தேர்தல் அட்டவணையும் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படவில்லை.
நவ. 12-ல் தேர்தல்..
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த அவர், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி அக்டோபர் 25 என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 29 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வழிகாட்டுதல்கள்...
இந்தத் தேர்தலில் மக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள ராஜிவ் குமார், தேர்தலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கே செல்வார்கள் என தெரிவித்துள்ள ராஜிவ் குமார், வாக்கு பதிவு வீடியோவாக பதிவு செய்யப்படும் என கூறினார்.
பா.ஜ.க.வுக்கு 44....
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2017 பொதுத் தேர்தலில் பாஜக 44 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது பாஜக 45 எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் 22 எம்எல்ஏக்களையும் சிபிஎம் ஒரு எம்எல்ஏவையும் கொண்டுள்ளன. இம்முறையும் பாஜக - காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்றாலும், ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை கைப்பற்றும் என கணிப்புகள் கூறுகின்றன.
கருத்துக்கணிப்பு...
ஏபிபி நியூஸ் - சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்த தேர்தலில் பாஜக 46.80% வாக்குகளைப் பெறும் என்றும், காங்கிரஸ் 32.30% வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 17.40% வாக்குகளைப் பெறும் என்றும் அது தெரிவித்துள்ளது.
குஜராத் தேர்தல் தேதி ?
குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதியை அறிவிக்காதது ஏன்? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது., "இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
அது மட்டுமின்றி வானிலை போன்ற பல காரணங்களும் உள்ளன. பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச தேர்தலை நடத்த விரும்புகிறோம். இமாச்சல பிரதேசத்தில் 70 நாட்களுக்கு பதிலாக 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.


