முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நாட்டில் கொரோனா 5-வது அலை பரவுகிறது

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      உலகம்
covid 2022-11-03

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 5-வது அலை பரவி வருகிறது. 

கடந்த 3 வாரங்களாக அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த செவ்வாய், புதன்கிழமை இடையே மட்டும் 6 ஆயிரத்து 541 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வரை அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 52 ஆயிரத்து 383 ஆக உள்ளது. 

தொற்றால் அங்கு 2 லட்சத்து 17 ஆயிரத்து 414 பேர் இறந்தும் உள்ளனர். பெரு நாட்டில் 5-வது அலையில் ஒமைக்ரானின் பிஏ. 5 வகையின் தாக்கம் தான் அதிகமாக உள்ளது. இந்த தகவல்களை அந்த நாட்டின் சுகாதார துறை அமைச்சர் கெல்லி போர்ட்டலாட்டினோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து