முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்கம் எப்போது? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
Duraimurugan 2021 12-06

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் முதற்கட்ட பணிகள் முடிந்த பிறகு தான் அடுத்த கட்டப் பணிகள் துவங்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, 

அத்திக்கடவு -  அவிநாசி திட்டத்தை கடந்த ஆட்சியில் அவசரப்பட்டு துவக்கி விட்டு முடிக்காமல் சென்று விட்டனர்.  அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பொருத்தவரை கடந்த ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே தற்போதும் செய்ய முடியாது. அந்த திட்டத்தை பொருத்தவரை, ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர், குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும். 

பல இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீர் செல்லும் இடமெல்லாம் தனியார் நிலங்கள் உள்ளன. அவைகளை எடுக்க வேண்டும். ஆகவே இவ்வாறு தொடர் பணிகள் உள்ளன. இந்த பணிகளை அப்படியே விட்டு விட்டு அத்திக்கடவு -  அவினாசி திட்டத்தை தொடங்க வேண்டும் என்று சொன்னால் இதையெல்லாம் செய்யாமல் ஏன் தொடங்கினீர்கள் என்ற கேள்வி வரும்.  ஆகவே செய்கிற பணிகளை முழுமையாக செய்த பிறகு அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர்  துரைமுருகன் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து