இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

குஜராத், மத்திய பிரதேசத்தில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. குஜராத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில் இந்த 2 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 58.68% வாக்குகள் பதிவாகி உள்ளன. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (8-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த 2 மாநிலங்களிலும், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 63.14% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, 2-வது மற்றும் இறுதி கட்டமாக, 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.54 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் தனது சகோதரர் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி ஆகியோர் வாக்களித்தனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இறுதியாக 2-ம் கட்ட தேர்தலில் 58.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த முறை பாஜக, காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்த முறை பாஜக,காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
முன்னதாக, 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நாளை (8-ம்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்று மதியமே எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெரிந்துவிடும்.
இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தையகருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக எளிதாக அறுதிப் பெரும்பான்மையை பெறும். கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெறும். அக்கட்சிக்கு இது வரலாற்று வெற்றியாக அமையும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும். எனினும் காங்கிரஸைவிட அதிக இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய - இங்கிலாந்து இன்று மோதல்
28 Jan 2023போட்செப்ஸ்ட்ரூம் : முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி: தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா சிட்சிபாஸ்..?- நோவாக் ஜோகோவிச்சை இன்று மோதல்
28 Jan 2023மெல்பர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
-
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் இறுதிச்சுற்றில் இன்று மோதல்
28 Jan 2023புவனேஷ்வர் : எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றில் ஜெர்மனி- பெல்ஜிய அணிகள் இன்று மோதுகின்றன.
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு அணி வெற்றி..!
28 Jan 2023சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களும், சவுராஷ்டிரா அணி 192 ரன்களும் எடுத்தன.
-
ஆல் ரவுண்டராக புதிய சாதனை படைத்தார் வாஷிங்டன் சுந்தர்..!
28 Jan 2023ராஞ்சி : ஆல் ரவுண்டராக புதிய சாதனை படைத்தார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.
155 ரன்கள்...
-
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-29-01-2023
29 Jan 2023 -
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
அண்ணா நினைவு நாள்: வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
29 Jan 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,
29 Jan 2023அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
-
இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை
29 Jan 2023நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.