முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      உலகம்
Ukraine-Russia 2023 01 28

Source: provided

நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள். இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் திட்டமிட்டு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. 

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரினால், இரு நாட்டு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 

இந்த நிலையில், உக்ரைனின் நொவைடர் நகர் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், மருத்துவமனை தரைமட்டமானது. தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் வேண்டுமென்றே நடத்தபட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து