முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் ஜி-20 மாநாடு - கருத்தரங்கம் தொடங்கியது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
G-20 2023-01-16

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜி 20 மாநாடு பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் நேற்று தொடங்கியது.

ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜி-20 மாநாட்டின் ஆரம்பக்கட்ட கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக்கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடையும். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, யூரோப் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தேசிய அறிவியல் அககாடமியின் தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. நட்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கடந்தாண்டு ஜி-20 மாநாடு நடத்திய இந்தோனேசியா, நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு தலைமை பொறுப்பேற்கவுள்ள பிரேசில் நாடுகளின் தலைமை விஞ்ஞானிகள் உரையுடன் மாநாடு தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து