முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் மொத்தம் 4.90 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Kiran-Rijiju 2023-01-16

Source: provided

மதுரை  ‘இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் நிலுவை வழக்குகள் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியது: "தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நீதித் துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. நீதித் துறையும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித் துறை கட்டமைப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். மத்திய அரசு நீதித் துறை மேம்பாட்டுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்கிறது. இப்பணத்தை சில மாநிலங்கள் முறையாக செலவு செய்வதில்லை. சில மாநிலங்கள் கூடுதல் நிதி கேட்கின்றன.

மத்திய அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை செலவு செய்தால்தான் எதிர்காலத்தில் கூடுதல் நிதி ஒதுக்க முடியும். நீதித் துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் இ-கோர்ட் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் எதிர்காலத்தில் இந்திய நீதிமன்றங்கள் காகிதம் இல்லா நீதிமன்றங்களாக செயல்படும்.

இந்தியாவில் நிலுவை வழக்குகள் பெரிய பிரச்சினையாக உள்ளது. 10 முதல் 15 ஆண்டுகள் கூட வழக்குகள் முடியாமல் உள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும். இந்தியாவில் இதுவரை மொத்தம் 4 கோடியே 90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் நீதிபதிகள் சொகுசாக வாழ்கின்றனர். வெளிநாட்டு நீதிபதிகள் தினமும் 4 முதல் 5 வழக்குகளை மட்டுமே விசாரிக்கின்றனர். இந்தியாவில் தினமும் 50 முதல் 60 வழக்குகள் வரை விசாரிக்கின்றனர் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து