எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். மாநகர பஸ்களில் சாதாரண ஒயிட் போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயண சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாத காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதற்கிடையே போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டும் 500 பஸ்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து சமீபத்தில் பேசி இருந்தார்.
அப்போது அவர் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சென்னை மாநகர போக்குவரத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி இருந்தார். மேலும் அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என்றும் ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மத்தியில் நேற்று முன்தினம் தகவல் பரவியது.
இதனால் மாநகர பஸ் டிரைவர்கள் நேற்று முன்தினம் மாலை திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர். பஸ்களையும் பணிமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். நடுரோட்டில் பல மணிநேரம் தவித்தனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். காண்டிராக்ட் ஊழியர்கள் நியமனம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார். இதை ஏற்று பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் பஸ் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை இன்று சந்தித்து பேச உள்ளார். அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்திக்கிறார்கள். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேச உள்ளனர்.
இதுகுறித்து சண்முகம் எம்.பி. கூறுகையில் போக்குவரத்து துறையில் 'அவுட் சோர்சிங் இல்லை' என்று வாக்குறுதி தரப்பட்டதால் தொழிலாளர்களின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இருந்தாலும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இன்று அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம் என்றார்.
எனவே இன்று பேச்சுவார்த்தைக்கு பிறகு 6-ம் தேதி பஸ் ஸ்டிரைக் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் குலாப் ஜாமுன்![]() 3 days 15 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 17 hours ago |
சில்லி சப்பாத்தி![]() 1 week 2 days ago |
-
இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - சீதாராம் யெச்சூரி தகவல்
22 Sep 2023பாட்னா : இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.
-
லெபனானில் அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு
22 Sep 2023பெய்ரூட் : லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்ப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் : பாதுகாப்பு பணியில் 18,500 போலீசார்
22 Sep 2023சென்னை : சென்னையில் இன்றும், நாளையும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து 2 வீரர்கள் விலகல்
22 Sep 2023ஜோகன்னஸ்பர்க் : 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது.
-
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
22 Sep 2023புதுச்சேரி : புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வாரண்டு பிறப்பிப்பு : அக். 4-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளாக பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐக
-
உங்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
22 Sep 2023சென்னை : உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று நடிகர் விஷாலை சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டித்தார்.
-
15 நாளில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் : சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்
22 Sep 2023சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், ரூ.2 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்
-
அமெரிக்காவில் ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு : கூடுதல் ஆயுதங்கள் வழங்குவது குறித்து பேச்சு
22 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஜோபைடன் மற்றும் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் வரவேற்றனர்.
-
இலக்கு என்பது கிடையாது: மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
22 Sep 2023சென்னை L மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
காலில் விழுந்த வானதி சீனிவாசனை செல்லமாக கடிந்து கொண்ட பிரதமர்
22 Sep 2023புதுடெல்லி : காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வை பிரதமர் மோடி, காலில் விழக் கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார்.
-
மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்
22 Sep 2023சென்னை : மணியம்மையார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை திட்ட பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
-
சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தல்
22 Sep 2023புதுடெல்லி : சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்தது ரஷ்யா
22 Sep 2023மாஸ்கோ : உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
-
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
22 Sep 2023சென்னை : தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
22 Sep 2023புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை நன்றி
22 Sep 2023புதுச்சேரி : சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
-
துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர 10 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
22 Sep 2023சென்னை : உடல் நலக்குறைவால் துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டு வர 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.&
-
சென்னையில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் : அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
22 Sep 2023சென்னை : சென்னை பெசன்ட் நகர் ஓடை மாநகர் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்: மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?
22 Sep 2023சென்னை : அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.
-
சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் 2 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு
22 Sep 2023ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
உ.பி.யில் பரபரப்பு: ரயில்வே பெண் போலீசை தாக்கியவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
22 Sep 2023லக்னோ : உத்தர பிரதேசத்தில் ரயில்வே பெண் போலீசை தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
22 Sep 2023பெங்களூர் : விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.