முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு அளித்த ரூ. 8,200 கோடி கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: இந்தியா

புதன்கிழமை, 31 மே 2023      உலகம்
India-Sri-Lanka 2023-05-31

Source: provided

கொழும்பு : இலங்கைக்கு இந்தியா அளித்த ரூ. 8,200 கோடி கடன் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது. இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. 

இந்தியா மொத்தம் ரூ. 32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது. அவற்றில் ஒரு பகுதியாக, ரூ. 8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. 

இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆகும். இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. 

இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்டு, ரூ. 8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை அமைச்சர் சினேகன் சேமா முன்னிலையில் கையெழுத்தானது. 

இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து