முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் வரும் 5-ம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு : கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்பாடு

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
RN Ravi 2023-04-06

Source: provided

சென்னை : புதிய தேசிய கொள்கை குறித்து விவாதிக்க ஊட்டியில் வரும் 5-ம் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ஆர்.என். ரவி நடத்தவிருக்கிறார். 

மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையை 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதில் பல அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கையை பற்றி ஆலோசனை செய்ய ஊட்டியில் வரும் 5-ம் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ஆர்.என்.ரவி நடத்த இருக்கிறார். 

அதற்கான கடிதத்தை அனைத்து துணைவேந்தர்களுக்கும் கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் அனுப்பியுள்ளார். இந்த மாநாட்டில் புதிய தேசியக் கல்விக் கொள்கை பற்றி, குறிப்பாக இந்திய மொழிகள் மூலம் பாடங்களை கற்றுக் கொடுக்க வழிவகை செய்யும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் கவர்னர் ஆர்.என்.ரவி இதுபோன்ற மாநாட்டை நடத்தினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து