எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெய்ஜிங் : 1982ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது. இந்தியா முதல் முறையாக பங்கேற்றபோதும், சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ரகுபீர் சிங், குலாம் முகமது கான், பிரஹலாத் சிங் போன்ற வீரர்கள் தனிநபர் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். அணிக்கான போட்டியில் ரகுபீர் மற்றும் முகமது ஆகியோர் தங்கம் வென்றனர்.
இந்த போட்டிக்கு பிறகு குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கம் வென்றதில்லை. அந்த கனவு 41 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிறைவேறியிருக்கிறது. ஆம், சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் கொண்ட இந்திய அணி தங்கம் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெருமைக்குரிய வீரர், வீராங்கனைகள் குறித்து பார்ப்போம்.
சுதிப்தி ஹஜேலா:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சுதிப்தி ஹஜேலா 10 வயதில் இருந்தே குதிரையற்ற பயிற்சி பெற்று வருகிறார். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக குதிரையேற்றத்தை தொடங்கிய அவர், தந்தையின் ஊக்கம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தன்னை தயார்ப்படுத்தியிருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் இவருக்கு மத்தியப் பிரதேச மாநில அரசு 'விக்ரம்' விருது வழங்கியது. 2020 ஆம் ஆண்டில், விளையாட்டில் சிறப்பான சாதனைக்காக 'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருது பெற்றார்.
திவ்யகிருதி சிங்:-
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பிறந்த திவ்யகிருதி சிங், தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார். குறிப்பாக, ஐரோப்பாவில் நடந்த பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அனுஷ் அகர்வாலா:-
1999 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்த அனுஷ் அகர்வாலா, 8 வயதில் குதிரையேற்ற பயிற்சி பெறத் தொடங்கினார். முதலில் குழந்தைகளுக்கான உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பின்னர் குதிரையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடையவதற்காக, 11 வயதில், டெல்லிக்கு செல்லத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போது, வார இறுதி நாட்களில் பயிற்சிக்காக டெல்லிக்கு விமானத்தில் செல்லத் தொடங்கினார். இந்த பயிற்சி அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார்.
ஹிருதய் சேடா:-
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த ஹிருதய் சேடா, தனது 6 வயதில் முதல் முறையாக குதிரையில் அமர்ந்துள்ளார். அதன்பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று பணியாற்றியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 12 hours 3 min ago |
தக்காளி சாஸ்![]() 3 days 15 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 12 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2023.
09 Dec 2023 -
ரேஷன் அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண நிதி உண்டு : தமிழ்நாடு அரசு தகவல்
09 Dec 2023சென்னை : குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண தொகை உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் காலமானார்
09 Dec 2023சென்னை : முண்டாசுபட்டி பட புகழ் நடிகர் மதுரை மோகன் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
-
4 மாவட்டங்களில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு வி
-
ஈராக்கில் பல்கலைக்கழக விடுதியில் திடீர் தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு
09 Dec 2023டெக்ரான் : ஈராக்கில் பல்கலைக் கழக விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விப்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது
09 Dec 2023காசா : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
-
நியாய விலைக்கடைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதமா? - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
09 Dec 2023சென்னை : நியாய விலைக்கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் மண்டல பூஜை: ஐயப்பனுக்கு 26-ம் தேதி தங்க அங்கி அணிவிப்பு
09 Dec 2023சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 27-ம் தேதி நடக்கிறது.
-
சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
09 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
தூத்துக்குடியில் தரைதட்டி நின்ற சரக்கு கப்பலை மீட்கும் பணி தீவிரம் : உரம் இறக்குமதி பாதிப்பு
09 Dec 2023தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் தரைதட்டி நிற்கும் சரக்கு கப்பலை இழுவை கப்பல் மூலம் மீட்கும் பணி தொடங்கியுள்ளது.
-
டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்
09 Dec 2023அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது., நான் எனது கண்ணில் அடிபட்ட விஷயத்தை சாதரண
-
பெண்கள் பிரிமீயர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீராங்கனை அனபெல்
09 Dec 2023மும்பை : பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல்லை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.
-
சோனியா பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Dec 2023புதுடெல்லி : சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.
-
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகில் பிரிவினைவாதம் அதிகரிப்பு : தலைமை நீதிபதி சந்திரசூட் குற்றச்சாட்டு
09 Dec 2023மும்பை : ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் இந்தியா மேன்மையுடன் செயல்படுகிறது என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், உலகம் முழுவதும் பிரிவினைவாதம் அதிகரிக்க
-
ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கொட்டப்பட்டதா?- ஆவின் நிர்வாகம் விளக்கம்
09 Dec 2023சென்னை : ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீ
-
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
09 Dec 2023சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
-
தமிழகத்தில் 15-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
09 Dec 2023சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காசாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம் : நிராகரித்தது அமெரிக்கா
09 Dec 2023நியூயார்க் : காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா.
-
நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற உழைத்திடுவோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
09 Dec 2023சென்னை : நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதன் மூலம் நம் மாணவர்களின் மருத்த
-
தமிழகத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு அளித்த நிதி எங்கே போனது? - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி
09 Dec 2023சென்னை : மத்திய அரசு ஏற்கனவே தமிழகத்திற்கு கொடுத்த நிதி எங்கே போனது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அம்மா பேரவை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்
09 Dec 2023மதுரை : மாநில அம்மா பேரவை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.
-
உலகக்கோப்பை போட்டி நடந்த பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மதிப்பீடு
09 Dec 2023லண்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - த
-
கவர்னர் மாளிகை அருகே என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு
09 Dec 2023சென்னை : கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
-
என்.ஐ.ஏ. சோதனையில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் 15 பேர் கைது
09 Dec 2023மும்பை : மகாராஷ்டிரா, கர்நாடகாவில் என்.ஐ.ஏ. நடத்திய திடீர் சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர.
-
இலங்கைக்கு ரூ.1660 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அனுமதி
09 Dec 2023கொழும்பு : இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ. 1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.